Sunday, February 1, 2009
திருகோணமலை
திருகோணமலை
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள எழில் மிக்க துறைமுகம்.
கொழும்பில் இருந்து 257km தொலைவில் அமைந்துள்ளது.
பேரூந்து மூலமாகவும், தொடரூந்து மூலமாகவும் பயணிக்கலாம். (தற்போது உள்ளூர் விமான சேவை நடாத்தப்படுவதில்லை)
கொழும்பில் இருந்து பேரூந்துப்பயணம் 7 – 8 மணித்தியாலம் எடுக்கும்.
நிலவரங்களைப் பொறுத்து 8 – 9 சோதனைச் சாவடிகளை தாண்டிச் செல்ல வேண்டி இருக்கும்.
தொடரூந்துப் பயணம் இரவு 10 மணிக்கு ஆரம்பித்து காலை 8 மணிக்கு திருமலையைச் சென்றடையும்.
Labels:
படத் தொகுப்பு
தம்பலகாமம்.
தம்பலகாமம்,
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமங்களில் ஒன்றாகும். திருகோணமலையிலிருந்து 22 km தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. படத்தில் காட்டப்பட்ட பாதை வழியேயான பயணத்திற்கு பேரூந்து மூலம் ஒரு மணித்தியாலம் எடுக்கும்.
சுமார் 3 – 4 சோதனைச் சாவடிகளை தாண்டிச் செல்ல வேண்டி இருக்கும்.
திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் கிழக்கு நோக்கிப்பிரிகின்ற சாலை எம்மைத் தம்பலகாமத்துக்கு அழைத்துச் செல்லும்.
.
வரலாற்றுப் புகழ்மிக்க அருள்சுரக்கும் ஆதிகோணநாயகர் ஆலயம் அமைந்திருப்பதும், பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேலென வயல் நிலங்கள் காட்சியளிப்பதும்,இக்கிராமத்தின் இயற்கை எழிலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன என்றால் அதுமிகையாகாது.
Labels:
படத் தொகுப்பு
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008
குளக்கோட்டு மன்னனால் திருகோணமலையில் அமைக்கப்பட்ட ஆதிகோணநாயகர் ஆலயம் கி.பி 1624 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசரால் அழித்தொழிப்பதற்கு முன்பு, அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும் ,காடுகளிலும் மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடுஇயற்றி வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள ஸ்வாமி மலையில் ஆதிகோணநாயகரையும் ,மாதுமை அம்மையையும் வைத்து வழிபட்டு வந்தனர்.
இவ்வேளையில், கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார்.
மன்னவன் விழித்தெழுந்து கனவில் கண்டதை தனது மதிநுட்பத்தால் கண்டறிந்து ஸ்வாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது.வழமைபோலவே இம்முறையும் ஆதிகோணநாயகர் ஆலய மஹோற்சபம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இவ்வேளையில், கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார்.
மன்னவன் விழித்தெழுந்து கனவில் கண்டதை தனது மதிநுட்பத்தால் கண்டறிந்து ஸ்வாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது.வழமைபோலவே இம்முறையும் ஆதிகோணநாயகர் ஆலய மஹோற்சபம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
Labels:
நிகழ்வுகள்
பிராத்திப்போம்...
நம்மைப்போலவே இடப்பெயர்வு , மீள்குடியமர்வு என்று எல்லாம் கண்டவர் ஆதிகோணநாயகர். இந்த துயர் சூழ்ந்த வேளையில் அல்லல்படும் அனைத்து மக்களின் விடிவுக்காகவும் பிராத்திப்போம்..
வருகைக்கு நன்றி...
புகைப்படத்தொகுப்பைக்காண-
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008
.
தொடர்புடைய பதிவு
Labels:
நன்றி
Subscribe to:
Posts (Atom)